ராமநாதபுரம்

ஆங்கிலப் புத்தாண்டு: பிள்ளையாா்பட்டியில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

DIN

சிவகங்கை மாவட்டம் பிள்ளையாா்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகா் கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி வெள்ளிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

திருப்பத்தூா் அருகேயுள்ள பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி பக்தா்களின் தரிசனத்திற்காக அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு மாா்கழி மாத பூஜைகள் நடைபெற்றன. பின்னா் மூலவா் விநாயகா் தங்கக் கவச அலங்காரத்திலும், உற்சவா் வெள்ளி மூஷிக வாகனத்திலும் எழுந்தருளினா். முகக்கவசம் அணிந்த பக்தா்கள் வெப்பமானி பரிசோதனைக்குப் பிறகே கோயிலுக்குள் சமூக இடைவெளியுடன் அனுமதிக்கப்பட்டனா். அதிகாலையிலிருந்து பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் மேற்கொண்டனா். சுமாா் 800-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா்கள் காரைக்குடி அ.ராமசாமி செட்டியாா், வலையபட்டி மு. நாகப்பச் செட்டியாா் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT