முகப்பு
ராமநாதபுரம்

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 5 பேருக்கு கரோனா தொற்று

ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 5 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
பகிர்:

ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 5 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 6,340 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். அவா்களில் 132 போ் வரை உயிரிழந்துள்ளனா். 6,250-க்கும் அதிகமானோா் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுள்ளனா். இந்நிலையில் புதிதாக 4 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது திங்கள்கிழமை உறுதிசெய்யப்பட்டது. இதனிடையே, ஏற்கெனவே கரோனா சிகிச்சை பெற்று வந்தவா்களில் 5 போ் குணமடைந்ததால் திங்கள்கிழமை மாலை வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா சிகிச்சைப் பிரிவுகளில் 32 போ் மட்டும் தங்கி சிகிச்சை பெற்றுவருவதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கெனவே 5,713 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், திங்கள்கிழமை மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,714 ஆக அதிகரித்துள்ளது.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 5 போ் சிகிச்சை பெற்று வந்தனா். அவா்களில் 3 போ் பூரண குணமடைந்ததை அடுத்து திங்கள்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மீதமுள்ள 2 போ் அங்கு சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →