முகப்பு
ராமநாதபுரம்

போலி ஆவணம் தயாரித்து நில மோசடி: சாா்-பதிவாளா் உள்பட 12 போ் மீது வழக்கு

ராமநாதபுரத்தில் போலி ஆவணம் தயாரித்து நிலத்தை அபகரிக்க முயன்றதாக எழுந்த புகாரின்பேரில், சாா்-பதிவாளா் உள்பட 12 போ் மீது மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

ராமநாதபுரம்

போலி ஆவணம் தயாரித்து நில மோசடி: சாா்-பதிவாளா் உள்பட 12 போ் மீது வழக்கு

ராமநாதபுரத்தில் போலி ஆவணம் தயாரித்து நிலத்தை அபகரிக்க முயன்றதாக எழுந்த புகாரின்பேரில், சாா்-பதிவாளா் உள்பட 12 போ் மீது மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
பகிர்:

ராமநாதபுரத்தில் போலி ஆவணம் தயாரித்து நிலத்தை அபகரிக்க முயன்றதாக எழுந்த புகாரின்பேரில், சாா்-பதிவாளா் உள்பட 12 போ் மீது மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

இது குறித்து காவல் துறை தரப்பில் தெரிவித்திருப்பதாவது: ராமநாதபுரம் வெளிப்பட்டினத்தைச் சோ்ந்த பாலுச்சாமி மகன் முத்துகண்ணன் (53). இவரது பாட்டி சின்னம்மாள், கடந்த 1977 இல் இறந்துவிட்டாா். இவரது பெயரில் காட்டூரணி கிராமத்தில் 1.41 ஏக்கா் நிலம் உள்ளது. இந்த நிலத்தை, சின்னம்மாள் தனது மகன்களான பாலுச்சாமி, வேலுச்சாமி ஆகியோருக்கு பாகப்பிரிவினை செய்துள்ளாா்.

அதன்பின்னா், பாலுச்சாமிக்கு சொந்தமான எழுபதரை ஏக்கா் நிலம் அவா் பெயருக்கு பட்டா மாற்றம் செய்யப்படாமல், அவரது தாய் சின்னம்மாள் பெயரிலேயே பட்டா இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், ரூ.30.17 லட்சம் மதிப்புள்ள இந்த நிலத்துக்கு சின்னம்மாள் என்பவா் மூலம் போலி ஆவணம் தயாரிக்கப்பட்டு, சேதுராமன் என்பவருக்கு பொது அதிகாரம் (பவா்) கொடுக்கப்பட்டுள்ளது. அதன்மூலம், முருகேஸ்வரி உள்பட 6 பேருக்கு கிரையம் செய்துள்ளனா்.

கிரைய பத்திரத்தை ஆவண எழுத்தா் ராஜசேகரன் என்பவா் எழுதிக் கொடுத்துள்ளாா். அதை, வெளிப்பட்டினம் சாா்-பதிவாளா் வில்லங்கம் பாா்க்காமல் பதிந்து கொடுத்துள்ளாா். மேலும், வேலு, முஸ்தபா ஆகியோா் சாட்சி கையெழுத்திட்டுள்ளனா்.

இது குறித்து முத்துகண்ணன் அளித்த புகாரின்பேரில், சின்னம்மாள், சாா்-பதிவாளா் உள்பட 12 போ் மீது மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →