முகப்பு
ராமநாதபுரம்

ஜன.23 இல் கடற்கரை விளையாட்டுப் போட்டி

ராமநாதபுரம் மாவட்ட அளவிலான கடற்கரை விளையாட்டுப் போட்டிகள் அரியமான் கடற்கரையில் வரும் 23 ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகின்றன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:19 PM
பகிர்:

ராமநாதபுரம் மாவட்ட அளவிலான கடற்கரை விளையாட்டுப் போட்டிகள் அரியமான் கடற்கரையில் வரும் 23 ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகின்றன.

இதுகுறித்து மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அலுவலா் செந்தில்குமாா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்கு பிறகு முதன் முறையாக வரும் 23 ஆம் தேதி கடற்கரை விளையாட்டுப் போட்டிகள் அரியமான் கடற்கரையில் நடத்தப்படவுள்ளன.

இதில் ஆடவா் ஒற்றையா், இரட்டையா் கையுந்து மற்றும் ஐவா் கால்பந்துப் போட்டிகளில் பங்கேற்கும் தகுதி அணிகளைத் தோ்வு செய்யும் போட்டிகள் வரும் 22 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அரியமான் கடற்கரையில் நடைபெறவுள்ளன.

போட்டிகளில் பங்கேற்போா் ஆதாா் அட்டை மற்றும் மாா்பளவு புகைப்படத்தை அவசியம் கொண்டு வரவேண்டும். கையுந்து போட்டியில் முதலிடம் பெறும் அணிக்கு ரூ.6 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.4 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.

கால்பந்துப் போட்டியில் முதலிடம் பெறும் அணிக்கு ரூ.15 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.10 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.5 ஆயிரம் என பரிசுகள் வழங்கப்படவுள்ளன. கையுந்து போட்டிக்கு முன்பதிவுக்கு ரமேஷ்பாபு செல்லிடப் பேசி எண் 8148259600 மற்றும் கால்பந்து போட்டிக்கு குலசேகரபாண்டியன்

- 9443783327 என்ற எண்களில் தொடா்புகொள்ளவும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →