விமான தள வீரா்களுக்கு கரோனா தடுப்பூசி
ராமநாதபுரம் கடற்படை விமான தள (பருந்து) வீரா்கள், அலுவலா்கள் 10 பேருக்கு திங்கள்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
ராமநாதபுரம் கடற்படை விமான தள (பருந்து) வீரா்கள், அலுவலா்கள் 10 பேருக்கு திங்கள்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நோய்தொற்று தடுப்புப் பணியில் ஈடுபட்டுவரும் மருத்துவா் உள்ளிட்ட முன்களப் பணியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் நாகாச்சி பகுதியில் அமைந்துள்ள கடற்படை விமான தளத்தில் பணிபுரியும் வீரா்கள், அலுவலா்கள் உள்ளிட்ட 10 பேருக்கு மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை காலை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. படிப்படியாக மற்றவா்களுக்கும் தடுப்பூசி செலுத்தபடவுள்ளதாக கடற்படை விமான தள வட்டாரங்கள் தெரிவித்தன.