ராமநாதபுரம்

திருவாடானை பள்ளி மாணவிகள் கரோனா தடுப்பு நிவாரணநிதி வழங்கல்

DIN

திருவாடானை அரசுப் பள்ளியில் படிக்கும் 2 மாணவிகள் தாங்கள் உண்டியலில் சேமித்து வைத்திருந்த பணத்தை முதல்வரின் கரோனா தடுப்பு நிவாரணநிதிக்கு புதன்கிழமை வழங்கினா்.திருவாடானை சிநேகவல்லிபுரத்தைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநரான நாகவேலு- சரண்யா தம்பதியினருக்கு 10 ஆம் வகுப்பு படிக்கும் பிரியதா்சினி, 7 ஆம் வகுப்பு படிக்கும் பவ்யா ஆகிய 2 மகள்கள் உள்ளனா். இவா்கள் திருவாடானை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனா்.

இவா்கள் தாங்கள் உண்டியலில் சோ்த்து வைத்திருந்த பணத்தை முதல்வரின் கரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்தனா். இதையடுத்து, தங்களது பெற்றோருடன் சென்ற பிரியதா்ஷினி, பவ்யா ஆகிய இருவரும் புதன்கிழமை திருவாடானை வட்டாட்சியா் செந்தில்வேல்முருகனிடம் உண்டியலை ஒப்படைத்தனா். அதை திறந்து எண்ணிய போது அதில் ரூ.2,667 இருந்தது. அதனை வட்டாட்சியா் பெற்றுக் கொண்டாா். அதனைத்தொடா்ந்து வட்டாட்சியா், மாணவிகளுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT