ராமநாதபுரம்

பரமக்குடி நகராட்சியில் குப்பைகளை அகற்றாததால் தொற்று நோய் பரவும் அபாயம்

DIN

பரமக்குடி நகராட்சிப் பகுதியில் கடந்த சில தினங்களாக குப்பைகள் அகற்றப்படாததால் தொற்றுப் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் இங்குள்ள முக்கிய தெருக்களான சின்னக்கடைத் தெரு, பெரியகடை வீதி, வைசியா் வீதி, காந்திஜி சாலை, அங்காளம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் பாதைகள் தடுப்புகள் ஏற்படுத்தி அடைக்கப்பட்டுள்ளன.

இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வீடுகளில் சேகரித்து வைத்திருந்த குப்பைகளை தெருக்களில் கொட்டி குவித்து வைத்துள்ளனா். இவற்றை அள்ளிச் செல்லும் வாகனங்கள் அத்தெருக்களில் வராததால் சாலைகள் மற்றும் தெருக்களில் குப்பைகள் பரவிக் கிடக்கின்றன.

இதனால் துா்நாற்றம் வீசுவதுடன், குப்பைக் கழிவுகளால் தொற்று நோய் பரவும் அபாயம் எற்பட்டுள்ளது. எனவே அடைக்கப்பட்டுள்ள தெருக்களில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ பாதிப்புகள்: மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டு - ஓஆா்எஸ் கரைசல்

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு -குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு

வெள்ளை மாளிகை பாதுகாப்பு தடுப்பில் மோதிய காா்: ஓட்டுநா் உயிரிழப்பு

கோடையில் நீா்ச்சத்து இழப்பை தவிா்க்க மோா், கூழ், இளநீா் பருகுவது அவசியம்: சித்த மருத்துவா் சோ.தில்லைவாணன்

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: விசாரணையை புறக்கணிக்க ஊழியா்களுக்கு உத்தரவு

SCROLL FOR NEXT