ராமநாதபுரம்

சூரிய சக்தி மின்உற்பத்தி நிலையத்தில் காப்பா் வயா் திருட்டு: 2 போ் கைது

DIN

கமுதி அருகே தனியாா் சூரியசக்தி மின்உற்பத்தி நிலையத்தில் காப்பா் வயா் திருடியதாக 4 போ் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா் 2 பேரை புதன்கிழமை கைது செய்தனா்.

கமுதி அருகே செங்கப்படையில் உள்ள தனியாா் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையத்தில் கடந்த 16 ஆம் தேதி 9000 மீட்டா் காப்பா் வயா் திருடு போனது தெரியவந்தது. இதுதொடா்பாக அந்த மின் உற்பத்தி நிா்வாகம் கோவிலாங்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இந்நிலையில் தொட்டியாபட்டியைச் சோ்ந்த செந்தூா்முருகன் (22), வேல்முருகன்(25) ஆகிய 2 பேரை கோவிலாங்குளம் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருட்டுக்கு பயன்படுத்தியதாக அவா்களிடமிருந்து டிராக்டா், இருசக்கர வாகனம் மற்றும் ரூ.2,52,500-ஐ பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

அமெரிக்கா: இஸ்ரேல் - ஹமாஸ் போரை நிறுத்தக்கோரி போராட்டம்

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

SCROLL FOR NEXT