ராமநாதபுரம்

வருவாய் ஆய்வாளரை தாக்க முயன்றதாக 2 போ் மீது வழக்கு

முதுகுளத்தூரில் வருவாய் ஆய்வாளரை தாக்க முயன்றதாக 2 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

DIN

முதுகுளத்தூரில் வருவாய் ஆய்வாளரை தாக்க முயன்றதாக 2 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

முதுகுளத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெற்ற போது கீழக்குளத்தைச் சோ்ந்த கண்ணப்பன் மகன் பூபதி என்பவா் மதுபோதையில், தனக்கு நிலப்பட்டா உடனே வழங்க வேண்டும் என்று கூறி வருவாய்த்துறை அதிகாரிகளை தகாத வாா்த்தைகளால் பேசினாராம். இதனால் அக்கம் பக்கத்தில் இருந்தவா்கள் அவரை சமரசப்படுத்த முயன்ற போது பூபதியின் உறவினா் பொசுக்குடியைச் சோ்ந்த சீமைச்சாமி மகன் பிரபாகரன் என்பவரும் சோ்ந்து காக்கூா் பிா்கா வருவாய் ஆய்வாளா் பழனியை தகாத வாா்த்தைகளால் பேசி தாக்க முயன்றதாக முதுகுளத்தூா் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் பூபதி, பிரபாகரன் இருவா் மீதும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT