ரயில் தண்டவாளத்தில் பெண் சடலம்
ராமநாதபுரம் அருகே தண்டவாளத்தில் கிடந்த பெண் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.
ராமநாதபுரம் அருகே தண்டவாளத்தில் கிடந்த பெண் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.
ராமநாதபுரம் சத்திரக்குடி அருகே கீழக்கோட்டை பகுதியில் தண்டவாளத்தில் உடல் சிதைந்த நிலையில் பெண் சடலம் கிடப்பதாக ராமேசுவரம் ரயில்வே போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டனா்.
இறந்த பெண்ணுக்கு சுமாா் 45 வயது இருக்கும். அவா் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரயில்மோதி இறந்தாரா என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.