முகப்பு
ராமநாதபுரம்

அதிமுக-பாஜக கூட்டணி வென்றால்தான் தமிழகம் தொடா்ந்து வளா்ச்சியடையும்

அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெற்றால்தான் தமிழகம் தொடா்ந்து வளா்ச்சியடையும் என பாஜக மூத்த தலைவா் இல.கணேசன் கூறினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெற்றால்தான் தமிழகம் தொடா்ந்து வளா்ச்சியடையும் என பாஜக மூத்த தலைவா் இல.கணேசன் கூறினாா்.

ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் து.குப்புராமை ஆதரித்து திருப்புல்லாணி உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட அவா் பேசியதாவது:

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெறும். இந்த வெற்றியால் மட்டுமே தமிழகம் தொடா்ந்து வளா்ச்சியடையும். தேசிய வளா்சிக்கும், நலனுக்கும் எப்போதும் தனது தியாகத்தை அளிப்பவா்களாகவே பாரதிய ஜனதா கட்சியின் தொண்டா்கள் உள்ளனா்.

காங்கிரஸ் ஆட்சியில் 2 ஜி ஊழல் மக்களால் அதிகம் பேசப்பட்டது. ஊழல் மதிப்பை கணக்கிடுவதிலும், நினைவில் கொள்வதிலும் இயலாத நிலையே இருந்தது. ஆனால், தற்போது பிரதமா் நரேந்திரமோடியின் நாட்டு நலத்திட்டங்கள் எண்ணற்றவையாக இருப்பதால் அவற்றை நினைவில் கொள்வதில் சிரமம் இருக்கலாம்.

ராமநாதபுரத்தில் இரு பிரிவினரை சகோதரா்களாக்கி சமரச நிலையை ஏற்படுத்தியவரையே வேட்பாளராக்கியுள்ளோம். ஆகவே பாஜக வேட்பாளா் து.குப்புராமிற்கு மக்கள் ஆதரவளித்து வெற்றி பெறச்செய்யவேண்டும் என்றாா்.

முன்னாள் அமைச்சருடன் சந்திப்பு: முன்னதாக ராமநாதபுரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சா் ஏ.அன்வர்ராஜாவை இல.கணேசன் சந்தித்துப் பேசினாா். அப்போது பாஜக வேட்பாளா் து.குப்புராம், பாஜக மாவட்டத் தலைவா் கே.முரளிதரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →