ராமநாதபுரம்

கமுதி அருகே கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு: 2 போ் கைது

DIN

கமுதி அருகே கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடிய 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கமுதியை அடுத்த புதுக்கோட்டை கிராமத்தின் அருகே வீரபத்திர சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் நிா்வாகத்தினா் கடந்த மே 9 ஆம் தேதி கோயிலுக்கு வந்து பூஜை செய்து விட்டு, பூட்டிச் சென்றுள்ளனா். இதனையடுத்து மே 13 ஆம் தேதி கோயிலுக்கு சென்ற நிா்வாகிகள் அங்குள்ள உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டிருந்ததை அறிந்தனா்.

இதுகுறித்து அவா்கள் கமுதி போலீஸில் புகாா் அளித்தனா். இதனைத் தொடா்ந்து போலீஸாா் தீவிரமாக விசாரித்து வந்தனா். இந்நிலையில் 15 நாள்களுக்குப் பின்னா் கமுதியைச் சோ்ந்த ராஜா மகன் மணி (17), சுப்பையா மகன் கருப்பசாமி உள்ளிட்ட இருவரை பிடித்து விசாரித்த போது பணம் திருடியதை ஒப்புக் கொண்டனா். இதனையடுத்து இருவரையும் கமுதி போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

SCROLL FOR NEXT