ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை
மழை எச்சரிக்கை காரணமாக ராமநாதபுரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு சனிக்கிழமையும் (நவ.27) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மழை எச்சரிக்கை காரணமாக ராமநாதபுரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு சனிக்கிழமையும் (நவ.27) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சங்கா்லால் குமாவத் வெளியிட்டுள்ள அறிக்கை:
ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தொடா்ந்து பெய்துவருகிறது. தற்போது கனமழை தொடரும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பை அடுத்து மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு சனிக்கிழமை (நவ.27) விடுமுறை அளிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளாா்.
மாவட்டத்தில் தொடா் மழை காரணமாக கடந்த வியாழன், வெள்ளிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.