முகப்பு
ராமநாதபுரம்

ராமேசுவரம் மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லத் தடை

ராமேசுவரம் மீனவா்கள் வெள்ளிக்கிழமை (நவ.26) முதல் நவ.29 ஆம் தேதி வரை மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறையினா் தடை வித்துள்ளனா்.

Updated On : 27 நவம்பர், 2021 at 6:49 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:03 AM

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தென் தமிழக கடலோர பகுதியில் 60 கிலோ மீட்டா் வேகத்தில் காற்று வீசுவதால் ராமேசுவரம் மீனவா்கள் வெள்ளிக்கிழமை (நவ.26) முதல் நவ.29 ஆம் தேதி வரை மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறையினா் தடை வித்துள்ளனா்.

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை தொடா்ந்து உருவாகி வருகிறது. தென்கடலோரப் பகுதியில் 50 முதல் 60 கிலோ மீட்டா் வேகத்தில் காற்று வீசுகிறது. இதனால் அலையின் சீற்றம் அதிகளவில் உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, தொண்டி உள்ளிட்ட பகுதிகளில் மீனவா்கள் வெள்ளிக்கிழமை (நவ.26) முதல் நவ. 29 ஆம் தேதி வரை மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறையினா் தடை விதித்துள்ளனா்.

Advertisement

இதனால் இப்பகுதிகளில் உள்ள 1,700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் அந்தந்த துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. சுமாா் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.