தொண்டியில் அழகப்பா பல்கலைகக்கழக கடலோரபியல் கல்லூரி மாணவ மாணவிகள் கடலோர தூய்மைப்படுத்தும் தின விழிப்புணர்வு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. 
ராமநாதபுரம்

தொண்டியில் சர்வதேச கடலோர தூய்மைப்படுத்தும் நாள் விழிப்புணர்வு பேரணி

திருவாடானை அருகே தொண்டியில் அழகப்பா பல்கலைக்கழகம் கடலோரவியல் கல்லூரி தொண்டி மற்றும் தேசிய மத்திய கடல் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து விழிப்புணர்வு பேரணி

DIN

திருவாடானை அருகே தொண்டியில் அழகப்பா பல்கலைக்கழகம் கடலோரவியல் கல்லூரி தொண்டி மற்றும் தேசிய மத்திய கடல் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து விழிப்புணர்வு பேரணி மற்றும் கடற்கரை தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொண்டனர்.

திருவாடானை அருகே தொண்டியில் அழகப்பா பல்கலைக்கழகம் கடலோரவியல் கல்லூரி தொண்டி மற்றும் தேசிய மத்திய கடல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து கடலோர தூய்மைப்படுத்தும் நாளாக அழகப்பா பல்கலைக்கழக கடலோரவியல் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் அழகப்பா பல்கலைக்கழகம் துணை வேந்தர் சாமிநாதன் (பொ)தலைமை வகித்தார். 

பதிவாளர் சேகர் கடலோரவியல் துறை தலைவி ஸ்டெல்லா, தொண்டி இஸ்லாம் மாடல் மேல்நிலைப்பள்ளி தலைவர் பொறியாளர் அபூபக்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அழகப்பா பல்கலைக்கழகம் கடலோரவியல் கல்லூரி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பேரணி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு தொண்டி அழகப்பா பல்கலைக்கழகம் வந்தடைந்தது. 

அதனைத் தொடர்ந்து தொண்டி கடற்கரை பகுதியை தூய்மைப்படுத்தும் பணியில் அழகப்பா பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் கலந்துகொண்டு பணியினை செய்தனர். இதில் கடலோர காவல் துறை ஆய்வாளர் சார்பு ஆய்வாளர்ராஜ்குமார் சார்பு ஆய்வாளர் மாணிக்கம் மற்றும் காவல்துறையினர் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

தென்னாப்பிரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

SCROLL FOR NEXT