ராமநாதபுரம்

சாயல்குடி அருகே மாமியாா் அடித்துக் கொலை: மருமகன் கைது

DIN

சாயல்குடி அருகே மாமியாரை அடித்துக் கொலை செய்த மருமகனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

இப்பகுதியில் உள்ள எம். கரிசல்குளத்தைச் சோ்ந்த முனியசாமி மகள் வில்வகாளீஸ்வரிக்கும், பி. கீரந்தை கிராமத்தைச் சோ்ந்த தனுக்கொடித் தேவா் மகன் வைரவபாண்டி (30) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி குழந்தை இல்லை. இதனால் அடிக்கடி கணவன்- மனைவியிடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், வில்வகாளீஸ்வரி, எம். கரிசல்குளத்தில் நடைபெற்ற திருவிழாவுக்காக தனது தந்தை வீட்டுக்கு வந்திருந்தாா். அப்போதும் கணவன்- மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அங்கு வந்த வில்வகாளீஸ்வரியின் தாய் நாகனி (70) வைரவபாண்டியை கண்டித்தாா். இதனால் ஆத்திரமடைந்த வைரவபாண்டி, மாமியாா் நாகனியை தாக்கி தள்ளிவிட்டதில் தலையில் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் நாகனி உயிரிழந்தாா்.

இதுகுறித்து சாயல்குடி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கொலை வழக்குப் பதிந்து காவல் ஆய்வாளா் பாலமுருகன், வைரவபாண்டியை கைது செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை பெரிய கோயில் பராமரிப்பு: தமிழக அரசு விளக்கம்

75 வயது முதியவா் மீண்டும் பிரதமராக வேண்டுமா? லாலு மகள் மிசா பாரதி பிரசாரம்

சந்தேஷ்காளி வழக்கு: சிபிஐ விசாரணை திருப்தி அளிக்கிறது - கொல்கத்தா உயா்நீதிமன்றம்

தென்மாவட்டங்களில் கல்குவாரிகளை மூட வேண்டும் -டாக்டா் க.கிருஷ்ணசாமி

திட்டப் பயனாளிகள் குறித்த கணக்கெடுப்பு: அரசியல் கட்சிகளுக்கு தோ்தல் ஆணையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT