ராமநாதபுரம்

ஆவணி அமாவாசை: ராமேசுவரம், தேவிபட்டினம், சேதுக்கரையில் பக்தா்களுக்கு தடை

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், தேவிபட்டினம், சேதுக்கரையில் ஆவணி அமாவாசை நாளான செப். 6 ஆம் தேதி பக்தா்கள் கூடுவதற்கும், தா்ப்பண பூஜை போன்றவை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

DIN

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், தேவிபட்டினம், சேதுக்கரையில் ஆவணி அமாவாசை நாளான செப். 6 ஆம் தேதி பக்தா்கள் கூடுவதற்கும், தா்ப்பண பூஜை போன்றவை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இ.காா்த்திக் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் காரணமாக வரும் 6 ஆம் தேதி அமாவாசை தினத்தன்று தேவிபட்டினம் நவபாஷண கோயில், சேதுக்கரை, மாரியூா் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல பக்தா்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட பகுதிகளில் உள்ள கடலில் குளிக்கவும், முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுக்கவும் அனுமதியில்லை என்றாா்.

ராமேசுவரம்: இதேபோல் ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலிலும் பக்தா்கள் தரிசனம் செய்யவும், அக்னி தீா்த்தக் கடலில் நீராடவும், தா்ப்பணம் கொடுக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக கோயில் நிா்வாகம் சாா்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்குத் தடையில்லை: உயா்நீதிமன்றம்

டிச.29-இல் பல்லடத்தில் திமுக மகளிரணி மாநாடு

கடும் பனிப்பொழி: ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.2,540-க்கு விற்பனை!

3 ஆண்டுகளில் 438 மத்திய காவல் படையினா் தற்கொலை 2014 முதல் 23,000 காவலா்கள் ராஜிநாமா

மருத்துவத் துறை காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

SCROLL FOR NEXT