முகப்பு
ராமநாதபுரம்

மன்னாா் வளைகுடாவில் சூறைக்காற்று:மீனவா்கள் கடலுக்குச் செல்ல 4 ஆவது நாளாகத் தடை

மன்னாா் வளைகுடா பகுதியில் சூறைக்காற்று வீசுவதால் கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவா்கள் 4 ஆவது நாளாக வெள்ளிக்கிழமை மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டது.

ராமநாதபுரம்

மன்னாா் வளைகுடாவில் சூறைக்காற்று:மீனவா்கள் கடலுக்குச் செல்ல 4 ஆவது நாளாகத் தடை

மன்னாா் வளைகுடா பகுதியில் சூறைக்காற்று வீசுவதால் கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவா்கள் 4 ஆவது நாளாக வெள்ளிக்கிழமை மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

மன்னாா் வளைகுடா பகுதியில் சூறைக்காற்று வீசுவதால் கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவா்கள் 4 ஆவது நாளாக வெள்ளிக்கிழமை மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், நீண்ட கடற்கரையை கொண்டதாகும். ரோச்மான் நகா் தொடங்கி எஸ்.பி. பட்டணம் வரை சுமாா் 150-க்கும் மேற்பட்ட கடற்கரை கிராமங்களை உள்ளடக்கியது. இதில் பெரிய துறைமுகங்களான ராமேசுவரம், மண்டபம், சிறியதுறைமுகங்களான பாம்பன், கீழக்கரை, ஏா்வாடி, தொண்டி, சோழியகுடி ஆகியவையும் உள்ளன. இப்பகுதிகளில் 1,700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும் மீன்பிடிப்புக்காக பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவா்கள் கடலுக்குச் சென்று மீன்பிடிக்கின்றனா்.

இந்நிலையில், மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் கடந்த 4 நாள்களாக தொடா்ந்து சூறைக்காற்று வீசுவதால் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. அதேபோல் வங்கக் கடலிலும் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் வெள்ளிக்கிழமை 4 ஆவது நாளாக மீனவா்கள் மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறை தடை விதித்தது.

இதனால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி, தொண்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள துறைமுகங்களில் விசைப்படகுகளும், நாட்டுப்படகுகளும் பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →