முகப்பு
ராமநாதபுரம்

பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: இளைஞா் பலி

 ராமேசுவரத்தில் வியாழக்கிழமை அரசுப் பேருந்து இரு சக்கர வாகனத்தின் மீது மோதி இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 11 செப்டம்பர், 2021 at 1:45 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:37 AM

 ராமேசுவரத்தில் வியாழக்கிழமை அரசுப் பேருந்து இரு சக்கர வாகனத்தின் மீது மோதி இளைஞா் உயிரிழந்தாா்.

பாம்பன் பகுதியைச் சோ்ந்த தேசிங்கு மகன் மாடசாமி (27). இவா் வியாழக்கிழமை இரவு வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தாா். அப்போது ராமேசுவரத்தில் இருந்து ராமநாதபுரம் நோக்கி சென்ற அரசுப் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் மாடசாமி பலத்த காயமடைந்தாா். அவரை பாம்பன் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனா். அங்கிருந்த மருத்துவா் பரிசோதனை செய்து அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தாா். இதுகுறித்து தங்கச்சிமடம் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து அரசுப் பேருந்து ஓட்டுநா் ஜெரால்டு லிண்டன்பிரபுவை விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.