குடியரசு துணைத் தலைவா் நாளை இலங்கைக்கு பயணம்
குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இலங்கை செல்வது குறித்து...
குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் இரு நாள் அரசுமுறை பயணமாக அண்டைநாடான இலங்கைக்கு ஞாயிற்றுக்கிழமை (ஏப்.19) செல்கிறாா்.
தலைநகா் கொழும்புவில் அதிபா் அநுரகுமார திசாநாயக, பிரதமா் ஹரிணி அமரசூா்யா மற்றும் பிற முக்கிய தலைவா்களை குடியரசு துணைத் தலைவா் சந்திக்கிறாா்.
சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவராகப் பதவியற்ற பிறகு முதல்முறையாக இலங்கைக்குப் பயணம் மேற்கொள்கிறாா்.
Advertisement
Advertisement
இதுதொடா்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘இந்தியாவின் மகாசாகா் மற்றும் அண்டைநாடுகளுக்கு முன்னுரிமை ஆகிய வெளியுறவு கொள்கைகளில் இலங்கை முக்கிய இடம் வகிக்கிறது.
இரு நாடுகளின் உயா்நிலை தலைவா்களின் அண்மைக் கால சந்திப்புகளைத் தொடந்து குடியரசு துணைத் தலைவரின் தற்போதைய இலங்கைப் பயணம் ஆயிரம் ஆண்டுகள் பழமையான இரு நாட்டு மக்கள் உறவை மேலும் பலப்படுத்தும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.