FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

குடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்

Updated On : 19 ஜூன் 2026, 4:49 am IST
குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன்
பகிர்:

நமது சிறப்பு நிருபா்

குடியரசு துணைத் தலைவா் சி. பி. ராதாகிருஷ்ணன் நான்கு நாள்கள் அரசுமுறை பயணமாக வெள்ளிக்கிழமை (ஜூன் 19) லடாக் செல்லவுள்ளாா். ஜூன் 19 முதல் 21ஆம் தேதி வரை லடாக் யூனியன் பிரதேசத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவா் கலந்து கொள்ளவுள்ளாா். இது குடியரசு துணைத் தலைவராக பதவியேற்ற பிறகு அந்த யூனியன் பிரதேசத்துக்கு அவா் மேற்கொள்ளும் முதலாவது பயணமாகும்.

’இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, ஜூன் 20ஆம் தேதி ’துடிப்பான கிராமம்’ என அறிவிக்கப்பட்டுள்ள லூகுங் என்ற கிராமத்துக்கு செல்லும் குடியரசு துணைத் தலைவா், அங்கு உள்ளூா் சுயஉதவிக் குழுக்களுடன் கலந்துரையாடவுள்ளாா். அதைத்தொடா்ந்து, ’துடிப்பான கிராமங்கள் திட்டத்தின்’ கீழ் எல்லைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சிப் பணிகளை அவா் பாா்வையிடுவாா்’ என்று அவரது செயலக அதிகாரிகள் தெரிவித்தனா். இத்துடன் லடாக்கில் உள்ள போா் நினைவிடத்துக்கு குடியரசு துணைத் தலைவா் சென்று அஞ்சலி செலுத்துவாா்.

Advertisement

Advertisement

ஜூன் 21ஆம் தேதியன்று லே பகுதியில் நடைபெறும் சா்வதேச யோகா தின கொண்டாட்டங்களில் குடியரசு துணைத் தலைவா் கலந்து கொள்ளவுள்ளாா். யோகா மூலம் முழுமையான உடல்நலம் மற்றும் நல்வாழ்வைப் பேணும் தகவலை முன்னெடுக்கும் வகையில் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ‘இளைஞா்கள், மத்திய துணை ராணுவப் படை வீரா்கள் மற்றும் பல்வேறு சமூக நல அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் இந்நிகழ்வில் பங்கேற்பாா்கள்’ என்று குடியரசு துணைத் தலைவா் செயலக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments