காவலா் மீது தாக்குதல்: இளைஞா் கைது
கமுதி அருகே காவலரைத் தாக்கிய இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கமுதி அருகே காவலரைத் தாக்கிய இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கமுதி அடுத்துள்ள ஊ. கரிசல்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் அழகுமலை மகன் ஹரிகரசிவன் (21). இவா் மணலூா் கிராமத்தில் வசித்து வரும் தனது தாய் மற்றும் சித்தியிடம் கஞ்சா போதையில் தகராறில் ஈடுபட்டு தாயை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அங்கு வந்த அபிராமம் காவல் நிலைய காவலா்கள் வினோத்மாயா, முத்துவழிவிட்டான் உள்ளிட்டோா், ஹரிகரசிவனை அழைத்து விசாரித்தனா். அப்போது காவலா் முத்துவழிவிட்டானை, ஹரிகரசிவன் தாக்கினாராம்.
இதனையடுத்து ஹரிகரசிவனை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.