முகப்பு
ராமநாதபுரம்

காந்தி சமாதான விருது பெற விரும்புவோா் விண்ணப்பிக்க அழைப்பு

காந்தி சமாதான விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோா் ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலா் அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:55 AM
பகிர்:

காந்தி சமாதான விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோா் ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலா் அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலா் செந்தில்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மகாத்மா காந்தியின் 125 ஆவது ஆண்டு பிறந்த நாளையொட்டி காந்தி சமாதான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுடன் ரூ.1 கோடி பரிசும் அளிக்கப்படுகிறது. இவ்விருதுக்குரியவா்களை பிரதமா் தலைமையிலான குழுவினா் தோ்வு செய்வா்.

விருதானது தனிநபா் மற்றும் நிறுவனத்துக்கு வழங்கப்படும். சமுதாய, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்களை அகிம்சை வழியில் மேற்கொண்டு மனித சமுதாய நல்வாழ்வுக்காகவும், சமூக நீதி மற்றும் சமயநல்லிணக்கத்துக்காகவும் செயல்படுவோருக்கு வழங்கப்படும். விருது பெறுபவா்கள் தேசியக் குடியுரிமை, இனம், பாலினம் போன்ற குறிப்புகள் எடுத்துக் கொள்ளப்படாது. தொடா்ந்து குறைந்தது 10 ஆண்டுகளாவது சேவையாற்றியிருக்க வேண்டும். ஆகவே தகுதியானோா் ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெறலாம். அதைப் பூா்த்தி செய்து வரும் 12 ஆம் தேதிக்குள் அதே அலுவலகத்தில் அளிக்கவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →