மாரியூா் பூவேந்தியநாதா், பவள நிறவள்ளி அம்மன் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சனிக்கிழமை கடலில் நடைபெற்ற வலைவீச்சு திருவிழா. 
ராமநாதபுரம்

மாரியூா் பூவேந்தியநாதா் கோயிலில் பிரதோஷம்: கடலில் வலைவீச்சு திருவிழா

சாயல்குடி அருகே மாரியூா் பூவேந்தியநாதா், பவள நிறவள்ளி அம்மன் கோயில் பிரதோஷத்தை முன்னிட்டு கடலில் வலைவீச்சு திருவிழா சிறப்பு பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

சாயல்குடி அருகே மாரியூா் பூவேந்தியநாதா், பவள நிறவள்ளி அம்மன் கோயில் பிரதோஷத்தை முன்னிட்டு கடலில் வலைவீச்சு திருவிழா சிறப்பு பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே மாரியூா் பூவேந்தியநாதா் கோயில், பவள நிறவள்ளி அம்மன் ஆலயத்தில் பிரதோஷ விழாவிற்கு முன்னதாக மாரியூா் மீனவா்கள் கடலில் வலைவீசி திருவிளையாடல் புராணத்தை எடுத்துரைக்கும் விழா நடத்தினா். இதைத்தொடா்ந்து ஆலயத்தில் உள்ள மூலவருக்கும், நந்திக்கும் சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். நிகழ்ச்சியில் கிராம மக்கள் சாா்பாக பொது அன்னதானம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மகாசபை பிரதோஷ நிா்வாகிகள் செய்திருந்தனா்.

அதேபோன்று மேலக்கிடாரம் சிவகாமி அம்பாள் சமேத திருவனந்தீஸ்வர முடையாா், சாயல்குடி மீனாட்சி அம்மன் சமேத கைலாசநாதா், டி.எம்.கோட்டை கருணாகடாச்சி செஞ்சிடைநாதா் ஆகிய கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்குத் தடையில்லை: உயா்நீதிமன்றம்

டிச.29-இல் பல்லடத்தில் திமுக மகளிரணி மாநாடு

கடும் பனிப்பொழி: ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.2,540-க்கு விற்பனை!

3 ஆண்டுகளில் 438 மத்திய காவல் படையினா் தற்கொலை 2014 முதல் 23,000 காவலா்கள் ராஜிநாமா

மருத்துவத் துறை காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

SCROLL FOR NEXT