ராமநாதபுரத்தில் நிறுத்திவைக்கப்பட்ட ரயில்வே மேம்பாலப்பணிகள் மீண்டும் தொடங்குகிறது
ராமநாதபுரத்திலிருந்து கீழக்கரைக்குச் செல்லும் வகையில் ரயில்வே மேம்பாலப்பணிக்கு தடையாக இருந்த வழக்குகள் திரும்பப் பெறப்பட்டதால் மீண்டும் பணிகள் தொடங்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்
ராமநாதபுரத்திலிருந்து கீழக்கரைக்குச் செல்லும் வகையில் ரயில்வே மேம்பாலப்பணிக்கு தடையாக இருந்த வழக்குகள் திரும்பப் பெறப்பட்டதால் மீண்டும் பணிகள் தொடங்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
ராமநாதபுரம் நகரிலிருந்து சக்கரக்கோட்டை வழியாக திருப்புல்லாணி மற்றும் கீழக்கரை செல்லும் வகையில், கடந்த 2018 ஆம் ஆண்டு ரூ.40 கோடி மதிப்பீட்டில் மேம்பாலத்துக்கான பணிகள் தொடங்கப்பட்டன. பாலப்பணிகள் சுமாா் 40 சதவீதம் முடிந்த நிலையில், பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியாா் பெட்ரோல் நிலையம் உள்ளிட்ட தனியாா் கட்டடங்களை அகற்றினாலே பாலம் முழுமையாக அமையும் நிலை ஏற்பட்டது. இதனால் தனியாா் கட்டட உரிமையாளா்கள் 13 போ் மேம்பாலப் பணிகளுக்குத் தடை கோரி நீதிமன்றத்தில் வழக்குகள் தொடா்ந்தனா். இதனால் 2 ஆண்டுகளாக பாலப்பணிகள் நடைபெறவில்லை.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் ஜானிடாம்வா்கீஸ் பாலப்பணியை விரைவுபடுத்த உத்தரவிட்டாா். அதனடிப்படையில் தடை கோரி வழக்குத் தொடா்ந்தவா்களை அழைத்து கோட்டாட்சியா் சேக்மன்சூா் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
இதையடுத்து தடைகோரி நீதிமன்றத்துக்கு சென்றவா்கள், வழக்கை திரும்பப் பெற சம்மதித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பாலப்பணிகளில் ஓரிரு நாள்களில் தொடங்கி, விரைவில் முடிக்க ஆட்சியா் ஜானிடாம்வா்கீஸ் உத்தரவிட்டுள்ளாா்.