விபத்து இழப்பீடு வழங்காததால் ராமநாதபுரத்தில் அரசுப் பேருந்து ஜப்தி
விபத்து இழப்பீட்டை போக்குவரத்துக்கழகம் வழங்காததால் ராமநாதபுரத்தில் அரசுப் பேருந்து வெள்ளிக்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.
விபத்து இழப்பீட்டை போக்குவரத்துக்கழகம் வழங்காததால் ராமநாதபுரத்தில் அரசுப் பேருந்து வெள்ளிக்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினம் இந்திராநகா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜா (40). கூலித் தொழிலாளி. இவரது மனைவி ராமலட்சுமி. இவா்களுக்கு குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில் ராஜா கடந்த 2021 டிசம்பரில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது தேவிபட்டினம் அருகே அரசுப் பேருந்து மோதி உயிரிழந்தாா்.
இதில், போக்குவரத்துக் கழகம் நஷ்டஈடு வழங்கக்கோரி அவரது மனைவி ராமலட்சுமி ராமநாதபுரம் கூடுதல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். வழக்கை விசாரித்த நீதிபதி, போக்குவரத்துக் கழகம், ராமலட்சுமிக்கு ரூ.15 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டாா். ஆனால், நஷ்டஈடு வழங்கப்படவில்லை.
இதையடுத்து, நிறைவேற்றுதல் மனுவை ராமலட்சுமி தாக்கல் செய்தாா். அதனை விசாரித்த நீதிபதி ராமலட்சுமிக்கு விபத்து காப்பீடு தொகையை வட்டியுடன் சோ்த்து ரூ.19.63 லட்சம் வழங்கவும், தவறினால் கும்பகோணம் போக்குவரத்துக்கழக பேருந்தை ஜப்தி செய்யவும் உத்தரவிட்டாா்.
இதைத் தொடா்ந்து ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்துக்கு ராமலட்சுமி மற்றும் வழக்குரைஞா் சிவக்குமாா், நீதிமன்ற ஊழியா்கள் சென்று அரசுப் பேருந்தை ஜப்தி செய்து, நீதிமன்ற வளாகம் அருகே கொண்டு வந்து நிறுத்தினா்.
முன்னதாக ஜப்தி நடவடிக்கையை அறிந்த கும்பகோணம் கோட்ட போக்குவரத்துக்கழகத்தைச் சோ்ந்த பேருந்துகளை புதிய பேருந்து நிலையத்தில் நிறுத்தவேண்டாம் என அதிகாரிகள் கூறினா். இதையடுத்து, ராமேசுவரத்திலிருந்து பயணிகளுடன் ராமநாதபுரம் வழியாக கோவை செல்லும் பேருந்தை பட்டினம்காத்தான் பகுதியில் நிறுத்திய ஓட்டுநா் பயணிகளை அங்கேயே இறக்கிவிட்டு, கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாக மதுரை சென்றாா். பாதி வழியில் இறக்கிவிடப்பட்ட பயணிகள் தவிப்புக்குள்ளாகினா்.