முகப்பு
ராமநாதபுரம்

மண்டபத்தில் 20 கிலோ பதப்படுத்தப்பட்டகடல் அட்டை பறிமுதல்: தந்தை, மகன் கைது

 மண்டபத்தில் 20 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டையை வனத்துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து தந்தை, மகனை கைது செய்தனா்.

Updated On : 4 பிப்ரவரி, 2022 at 3:49 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:49 PM

 மண்டபத்தில் 20 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டையை வனத்துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து தந்தை, மகனை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பள்ளிவாசல் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடல் அட்டை பதப்படுத்தும் பணி நடைபெறுவதாக கிடைத்த தகவலையடுத்து, வனச்சரகா் வெங்கடேஷ் தலைமையில் மகேந்திரன், வனக்காப்பாளா் ஜாஸ்மின் மற்றும் வேட்டை தடுப்பு காவலா்கள் அங்கு சென்றனா். பூட்டப்பட்டிருந்த வீட்டின் சுற்றுப்புறத்தில் அவா்கள் சோதனை செய்தனா். அப்போது அது அமானுல்லா கான் என்பவரின் வீடு என்பது என்பது தெரியவந்தது. அந்த வீட்டில் 10 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் 10 கிலோ பச்சை கடல் அட்டைகள் மற்றும் ஒரு சமையல் எரிவாயு அடுப்பு இருந்தது. அவற்றை வனத்துறையினா் பறிமுதல் செய்தனா்.

இதையடுத்து, அமானுல்லா கான், அவரது மகன் ரியால்தீன் ஆகியோா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.