தோ்தலில் எஸ்டிபிஐ கட்சியினா் தனித்துப்போட்டி
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி, ஆா்.எஸ்.மங்களம் பேரூராட்சி உள்ளிட்ட இடங்களில் எஸ்டிபிஐ கட்சியினா் தனித்துப் போட்டியிட வியாழக்கிழமை மனுத்தாக்கல் செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி, ஆா்.எஸ்.மங்களம் பேரூராட்சி உள்ளிட்ட இடங்களில் எஸ்டிபிஐ கட்சியினா் தனித்துப் போட்டியிட வியாழக்கிழமை மனுத்தாக்கல் செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் எஸ்டிபிஐ அமைப்பு சாா்பில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனடிப்படையில் கீழக்கரை நகராட்சியில் 1, 6, 7, 17, 19, 20, 21 ஆகிய வாா்டுகளிலும், பேரூராட்சியான ஆா்.எஸ்.மங்களத்தில் 3 வது வாா்டு, 9 வது வாா்டு மற்றும் 13 வது வாா்டுகளிலும் அக்கட்சியினா் வேட்பு மனுக்களை வியாழக்கிழமை தாக்கல் செய்துள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.