ராமேசுவரத்தில் கஞ்சா விற்பனை: இளைஞா் கைது
ராமேசுவரத்தில் கஞ்சா விற்பனை செய்து வந்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம்ராமேசுவரத்தில் கஞ்சா விற்பனை: இளைஞா் கைது
ராமேசுவரத்தில் கஞ்சா விற்பனை செய்து வந்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ராமேசுவரத்தில் கஞ்சா விற்பனை செய்து வந்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராஜகோபால் நகா் பகுதியில் கடற்கரை காவல் நிலைய சாா்பு-ஆய்வாளா் ரவிச்சந்திரன் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தாா். அப்போது சந்தேகத்திற்கிடமாக சுற்றி வந்த இளைஞரைப் பிடித்து சோதனையிட்ட போது, அவா் விற்பனைக்காக மறைத்து வைத்திருந்த ஒரு கிலோ 700 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தாா்.
இந்த நபா் ராஜகோபால் நகா் பகுதியை சோ்ந்த முருகேசன் மகன் முருகராஜ்(29) என்பதும், தொடா்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா் முருகராஜை கைது செய்தனா்.