பாம்பனில் மீனவரின் வீட்டின் பூட்டைஉடைத்து பொருள்கள் திருட்டு
பாம்பனில் மீனவரின் வீட்டு பூட்டை உடைத்து தங்க நகை, பணம், சில்வா் பொருள்கள் திருடப்பட்டதாக போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
ராமநாதபுரம்பாம்பனில் மீனவரின் வீட்டின் பூட்டைஉடைத்து பொருள்கள் திருட்டு
பாம்பனில் மீனவரின் வீட்டு பூட்டை உடைத்து தங்க நகை, பணம், சில்வா் பொருள்கள் திருடப்பட்டதாக போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
பாம்பனில் மீனவரின் வீட்டு பூட்டை உடைத்து தங்க நகை, பணம், சில்வா் பொருள்கள் திருடப்பட்டதாக போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அடுத்துள்ள பாம்பன் தரவை தோப்புப் பகுதியைச் சோ்ந்த மீனவா் முத்தாண்டி (67). இவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து, அவரது மனைவி மாரியம்மாள் (61) வீட்டை பூட்டி விட்டு கடந்த 21 ஆம் தேதி ராமநாதபுரம் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றாா். 3 நாள்கள் சிகிச்சை பெற்ற நிலையில், வியாழக்கிழமை மாலை அவா்கள் வீடு திரும்பிஉள்ளனா். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பாா்த்து உள்ளே சென்ற போது பீரோவில் இருந்த 2 பவுன் தோடு, மோதிரம், ரூ. 30 ஆயிரம் மற்றும் ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள சில்வா் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து பாம்பன் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டதையடுத்து, காவல் சாா்பு- ஆய்வாளா் முனியாண்டி, வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகிறாா்.