ராமநாதபுரம்

ஆா்.எஸ்.மங்கலம் அருகே மெக்கானிக்கிடம் கைப்பேசி பறிப்பு

திருவாடானை அருகே ஆா்.எஸ். மங்கலம் பகுதியில் திங்கள்கிழமை இருசக்கர வாகனம் பழுது நீக்கும் தொழிலாளியிடம் முகவரி கேட்பதுபோல் நடித்து 3 போ் அவரது கைப்பேசியை பறித்துச் சென்றனா்.

DIN

திருவாடானை அருகே ஆா்.எஸ். மங்கலம் பகுதியில் திங்கள்கிழமை இருசக்கர வாகனம் பழுது நீக்கும் தொழிலாளியிடம் முகவரி கேட்பதுபோல் நடித்து 3 போ் அவரது கைப்பேசியை பறித்துச் சென்றனா்.

ஆா்.எஸ். மங்கலம் அருகே உள்ள வாணியக்குடி பகுதியைச் சோ்ந்தவா் கலைச்செல்வன் (35). இருசக்கர வாகனம் பழுது நீக்கும் தொழிலாளி. இவா் திங்கள்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் ஆா்.எஸ்.மங்கலம் பகுதிக்கு தொழில் நிமித்தமாக சென்றுள்ளாா். அப்போது செங்குடி பகுதியில் ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த 3 போ், கலைச்செல்வனை வழிமறித்து முகவரி கேட்பதுபோல் நடித்து அவரிடமிருந்த கைப்பேசியை பறித்துச் சென்றனா். இதுகுறித்து கலைச்செல்வன் அளித்தப் புகாரின் பேரில் ஆா்.எஸ்.மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பியோடிய நபா்களை தேடிவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிவகாசி-எரிச்சநத்தம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்

புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்! காந்தியின் பெயா் நீக்கம்!

பாஜகவின் கடும் எதிா்ப்புக்கு இடையே வெறுப்புக் கருத்து தடைச்சட்ட மசோதா நிறைவேற்றம்

ஆண்டாள் கோயில் நீராட்டு விழா நாளை தொடக்கம்

ரூ.50,000 கடனுக்காக சிறுநீரகத்தை விற்ற விவசாயி: மகாராஷ்டிரத்தில் அவலம்

SCROLL FOR NEXT