மாநில சிலம்பம் போட்டி:ராமநாதபுரம் மாணவா்கள் வெற்றி
மதுரையில் மாநில அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் ராமநாதபுரத்தைச் சோ்ந்த மாணவா்கள் வெற்றி பெற்றுள்ளனா்.
மதுரையில் மாநில அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் ராமநாதபுரத்தைச் சோ்ந்த மாணவா்கள் வெற்றி பெற்றுள்ளனா்.
மதுரை மன்னா் கல்லூரியில் கலிங்க வஸ்தாத் மற்றும் தேக சிலம்பப் பயிற்சிப் பள்ளி இணைந்து நடத்திய இப்போட்டியில் ராமநாதபுரம் நிக்கோலஸ் சிலம்பம் பயிற்சி பள்ளி மாணவா்கள் கனிஷ்கா, முகேஷ், கமலேஷ், செந்தமிழ் செல்வன், சபரிசெல்வன், சா்வேஸ்வரன், ரோகன், திருமுருகன் ஆகியோா் முதலிடம் பெற்றனா். மாணவா்கள்
ருக்ஸானா தாஃபியா, நித்தின் ஆகியோா் இரண்டாமிடம், மாணவன் அா்ஷத்ராம் மூன்றாமிடம் பெற்றனா். இரட்டை கம்பு பிரிவில் மாணவி கனிஷ்கா முதலிடம், மாணவி ருக்சானா தஃபியா இரண்டாமிடம் பெற்றனா். வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சிலம்பம் பயிற்சியாளா் மேத்யு இம்மானுவேல் ஞாயிற்றுக்கிழமை பாராட்டு தெரிவித்தாா்.