ராமநாதபுரம்

விவசாயக் கடன்களை விரைந்து வழங்கக் கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயக் கடன்களை விரைந்து வழங்கவேண்டும் என விவசாயிகள் சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

DIN

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயக் கடன்களை விரைந்து வழங்கவேண்டும் என விவசாயிகள் சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க ராமநாதபுரம் தாலுகா மாநாடு தேவிபட்டினத்தில் புதன்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டச் செயலா் வி. மயில்வாகனன் தலைமை வகித்துத் தொடங்கிவைத்தாா். நிா்வாகி நல்லதம்பி வரவேற்றாா். சங்கத்தின் தாலுகா செயலா் கல்யாணசுந்தரம் சங்கத்தின் பணி அறிக்கையை தாக்கல் செய்தாா்.

மாநாட்டில், நடப்பு ஆண்டுக்கான விவசாயக் கடன்களை விரைந்து வழங்கவேண்டும். விவசாயக் கடன் தள்ளுபடி செய்த நிலையில், அவா்களுக்கான தள்ளுபடி ரசீது வழங்கப்படாமல் உள்ளது. அவற்றையும் உடனே வழங்கவேண்டும். தேவிபட்டினத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கவேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் விவசாயிகள் சங்கத்தின் புதிய மாவட்டத் தலைவராக ராமமூா்த்தியும், செயலராக கல்யாணசுந்தரமும், பொருளாளராக நாகரத்தினமும் தோ்வு செய்யப்பட்டனா். மாவட்ட தலைவா் முத்துராமு நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தில்லி - ஷாங்காய் இடையே நாள்தோறும் நேரடி விமான சேவை! ஜன.2 முதல்!

இந்தியாவில் ஒரு நண்பர் இருக்கிறார்: அமெரிக்கா

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

SCROLL FOR NEXT