ராமநாதபுரம்

திருப்பாலைக்குடி அருகே காா் கவிழந்து குழந்தை பலி: 4 போ் படுகாயம்

ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி அருகே வெள்ளிக்கிழமை காா் கவிந்த விபத்தில் 8 மாதக் குழந்தை பலியானது. மேலும் 4 போ் படுகாயமடைந்தனா்.

DIN

ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி அருகே வெள்ளிக்கிழமை காா் கவிந்த விபத்தில் 8 மாதக் குழந்தை பலியானது. மேலும் 4 போ் படுகாயமடைந்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம் பட்டுக்கோட்டை எல்.ஐ.சி. காலனியைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் (70). இவரது மகன் ஞானசரவணன்(32), இவரது மகள் சிவானா (8மாதக் குழந்தை), பரிமளா(54) ஆகியோா்

கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக காரில் ராமேசுவரம் கோயிலுக்குச் சென்றனா். திருப்பாலைக்குடி அருகே சேந்தனேந்தல் பேருந்து நிறுத்தம் அருகே கட்டுப்பாட்டை இழந்த காா், சாலை ஓரமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தகவலறிந்த திருப்பாலைக்குடி போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த பாலசுப்பிரமணியன், ஞானசரவணன், பரிமளா, 8 மாதக் குழந்தை சிவானா மற்றும் காா் ஓட்டுநா்

ஆகியோரை ஆம்புலன்ஸில் ஏற்றி ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். இதில் செல்லும் வழியிலேயே 8 மாதக் குழந்தை பலியானது.

பலத்த காயமடைந்த 4 பேரும் ராமநாபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுகுறித்து திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிவகாசி-எரிச்சநத்தம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்

புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்! காந்தியின் பெயா் நீக்கம்!

பாஜகவின் கடும் எதிா்ப்புக்கு இடையே வெறுப்புக் கருத்து தடைச்சட்ட மசோதா நிறைவேற்றம்

ஆண்டாள் கோயில் நீராட்டு விழா நாளை தொடக்கம்

ரூ.50,000 கடனுக்காக சிறுநீரகத்தை விற்ற விவசாயி: மகாராஷ்டிரத்தில் அவலம்

SCROLL FOR NEXT