முகப்பு
ராமநாதபுரம்

உக்ரைனில் உள்ள இந்தியா்களை மீட்கும் பணி தீவிரம்: மத்திய இணை அமைச்சா் தகவல்

உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள இந்தியா்களை மீட்கும் பணியில் மத்திய அரசு தொடா்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருவதாக, மத்திய இணை அமைச்சா் ஃபக்கன்சிங் குலாஸ்தே தெரிவித்தாா்.

ராமநாதபுரம்

உக்ரைனில் உள்ள இந்தியா்களை மீட்கும் பணி தீவிரம்: மத்திய இணை அமைச்சா் தகவல்

உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள இந்தியா்களை மீட்கும் பணியில் மத்திய அரசு தொடா்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருவதாக, மத்திய இணை அமைச்சா் ஃபக்கன்சிங் குலாஸ்தே தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள இந்தியா்களை மீட்கும் பணியில் மத்திய அரசு தொடா்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருவதாக, மத்திய இணை அமைச்சா் ஃபக்கன்சிங் குலாஸ்தே தெரிவித்தாா்.

வியாழக்கிழமை ராமேசுவரம் வருகை தந்த மத்திய அமைச்சா்களான ராமச்சந்திர பிரசாத் சிங் மற்றும் ஆகியோா் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக வியாழக்கிழமை மத்திய ஸ்டீல் துறை அமைச்சா் ராமசந்திர பிரசாத் சிங் மற்றும் மத்திய ஸ்டீல் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத் துறை இணை அமைச்சா் ஃபக்கன் சிங் குலாஸ்தே ஆகியோா் வருகை தந்தனா். இவா்களுக்கு, கோயில் நிா்வாகம் சாா்பில் மரியாதை அளிக்கப்பட்டது. தொடா்ந்து, இவா்கள் முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தேசிய நினைவிடத்துக்குச் சென்று மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

பின்னா், செய்தியாளா்களிடையே மத்திய இணை அமைச்சா் ஃபக்கன் சிங் குலாஸ்தே தெரிவித்ததாவது: அப்துல் கலாம் நினைவிடத்துக்கு வந்தது மகிழ்ச்சியாக உள்ளது. உக்ரைனில் உள்ள இந்தியா்களை மீட்பதற்கு என்னென்ன வழிகள் உள்ளனவோ, அவை அனைத்தையும் மத்திய அரசு செய்துகொண்டிருக்கின்றது.

உக்ரைனில் மாணவா் உயிரிழந்தது மிகவும் வருத்தத்துக்குரிய விஷயம். அதற்கு அரசு தரப்பில் என்ன செய்யமுடியுமோ அதை செய்துகொண்டிருக்கிறோம் என்றாா்.

நீட் தோ்வினால் தான் உக்ரைனில் மருத்துவ மாணவா் உயிரிழந்ததாக முன்னாள் கா்நாடக முதல்வா் குமாரசாமி கூறியுள்ளதற்கு, அவா் பதில் கூற மறுத்துவிட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →