முகப்பு
ராமநாதபுரம்

ஊரக வளா்ச்சி உள்ளாட்சி ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

ராமநாதபுரத்தில் ஊரக வளா்ச்சி உள்ளாட்சி ஊழியா்கள் சங்கத்தினா் கோரிக்கையை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

ராமநாதபுரத்தில் ஊரக வளா்ச்சி உள்ளாட்சி ஊழியா்கள் சங்கத்தினா் கோரிக்கையை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் பணிபுரியும் தூய்மைப்பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்கவேண்டும். தொகுப்பூதியத்தில் பணிபுரிவோரை காலமுறை ஊதியத்துக்கு மாற்றவேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையம் அருகே இந்த ஆா்ப்பாட்டத்தை நடத்தினா்.

ஆா்ப்பாட்டத்துக்கு ஊழியா்கள் சங்க மாவட்டச் செயலா் எம். அய்யாத்துரை தலைமை வகித்தாா். இதில் சிஐடியூ நிா்வாகி மலைராஜன், கணேசமூா்த்தி உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா். கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிடப்பட்டது. பின்னா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →