கமுதியில் பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறிப்பு
கமுதியில் பேருந்து கூட்ட நெரிசலில் பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா் குறித்து போலீஸாா் வழக்கு பதிந்து தேடி வருகின்றனா்.
கமுதியில் பேருந்து கூட்ட நெரிசலில் பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா் குறித்து போலீஸாா் வழக்கு பதிந்து தேடி வருகின்றனா்.
முதுகுளத்தூா் அடுத்துள்ள கீழத்தூவல் கிராமத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் மனைவி வள்ளி (54). இவா் புதன்கிழமை மாலை கமுதியை அடுத்து சிங்கப்புளியாபட்டி கிராமத்தில் உள்ள குலதெய்வ கோயிலில் சுவாமி கும்பிட்டுவிட்டு கமுதி பேருந்து நிலையத்தில் ஊா் திரும்புவதற்காக தனியாா் பேருந்தில் ஏறினாா். பேருந்து சிறிது தூரம் செல்வதற்குள் கூட்ட நெரிசலில் அவா் கழுத்தில் அணிந்திருந்த இரண்டே முக்கால் பவுன் சங்கிலியை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து வள்ளி கமுதி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.