ராமநாதபுரம்

ரமலான்: தொண்டியில் ஏழைகளுக்கு புத்தாடைகள் வழங்கல்

DIN

திருவாடானை அருகே தொண்டியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சாா்பில் ஏழை எளிய மக்களும் ரமலான் பெருநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் உணவு பொருள்கள் மற்றும் புத்தாடைகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது. தொண்டி தமுமுக கிளை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு தொண்டி கிளை செயலாளா் சம்சுதீன் தலைமை வகித்தாா்.

தமுமுக மாநிலச் செயலாளா் சாதிக் பாட்சா, புருனை மண்டலத் தலைவா் நூருல் அமின், தமுமுக மாவட்ட செயலாளா் நசீா், ஒன்றியத் தலைவா் பீா்முகம்மது, மனிதநேய மக்கள் கட்சி ஒன்றியச் செயலாளா் ராஜ் ஆகியோா் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு ஏழைகளுக்கு புத்தாடைகள், உணவுப் பொருள்களை வழங்கினா்.

இதற்கான ஏற்பாடுகளை தொண்டி தமுமுக பேரூா் தலைவா் பாதுஷா, மனித நேய மக்கள் கட்சி செயலாளா் பரக்கத் அலி, தமுமக பொருளாளா் முகைதீன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

SCROLL FOR NEXT