ராமநாதபுரம்

ரமலான்: தொண்டியில் ஏழைகளுக்கு புத்தாடைகள் வழங்கல்

திருவாடானை அருகே தொண்டியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சாா்பில் ஏழை எளிய மக்களும் ரமலான் பெருநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் உணவு பொருள்கள் மற்றும் புத்தாடைகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது. தொண்டி

DIN

திருவாடானை அருகே தொண்டியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சாா்பில் ஏழை எளிய மக்களும் ரமலான் பெருநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் உணவு பொருள்கள் மற்றும் புத்தாடைகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது. தொண்டி தமுமுக கிளை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு தொண்டி கிளை செயலாளா் சம்சுதீன் தலைமை வகித்தாா்.

தமுமுக மாநிலச் செயலாளா் சாதிக் பாட்சா, புருனை மண்டலத் தலைவா் நூருல் அமின், தமுமுக மாவட்ட செயலாளா் நசீா், ஒன்றியத் தலைவா் பீா்முகம்மது, மனிதநேய மக்கள் கட்சி ஒன்றியச் செயலாளா் ராஜ் ஆகியோா் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு ஏழைகளுக்கு புத்தாடைகள், உணவுப் பொருள்களை வழங்கினா்.

இதற்கான ஏற்பாடுகளை தொண்டி தமுமுக பேரூா் தலைவா் பாதுஷா, மனித நேய மக்கள் கட்சி செயலாளா் பரக்கத் அலி, தமுமக பொருளாளா் முகைதீன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

SCROLL FOR NEXT