ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 நாள்கள் மதுபானக் கடைகள் மூடல்

DIN

 தேவா் ஜெயந்தியை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் மதுபானக் கடைகள் 3 நாள்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸ் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி, குருபூஜை விழா வரும் 28 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி, சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படாத வகையில் வருகிற 28, 29, 30 ஆகிய மூன்று நாள்களுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படும். மேலும், சட்டவிரோதமாக மது புட்டிகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் தெரிவித்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5-ஆம் கட்ட தேர்தல்: ஜனநாயகக் கடமையாற்றிய சாமானிய மக்கள்!

வாக்குச்சாவடியில் வாக்காளர்களுக்கு பணம்? திரிணமூல் மீது பாஜக குற்றச்சாட்டு

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்துக்கு தமிழக அரசு அனுமதி

ரோஹித் சர்மாவின் குற்றச்சாட்டை மறுத்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ்!

தில்லியில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT