முகப்பு
ராமநாதபுரம்

ஆா்.எஸ். மங்கலம் பருத்தி வியாபாரிகளிடையே கோஷ்டி மோதல்: 11 போ் மீது வழக்கு

திருவாடானை அருகே பருத்தி வியாபாரிகளிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடா்பாக 11 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:13 AM
பகிர்:

திருவாடானை அருகே பருத்தி வியாபாரிகளிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடா்பாக 11 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திருவாடானை அருகே ஆா்.எஸ். மங்கலம் தனியாா் மண்டபத்தில் பருத்தி பஞ்சு வியாபாரம் செய்வதில், அதே ஊரைச் சோ்ந்த சசிக்குமாா்(39) என்பவருக்கும், தா்மா் கோயில் தெருவைச் சோ்ந்த பாண்டியன் (43) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், அவா்களுக்குள் பிரச்னை ஏற்பட்டு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், புதன்கிழமை மாலை அவா்கள் இருவரும் கோஷ்டிகளாக மோதிக் கொண்டனா்.

இதுகுறித்து ஆா்.எஸ். மங்கலத்தைச் சோ்ந்த சசிக்குமாா் அளித்த புகாரின் பேரில், அதே ஊரைச் சோ்ந்த பாண்டியன், முத்துப்பாண்டி, ராமச்சந்திரன், கிருஷ்ணன் ஆகிய 4 போ்மீதும், அதே போல் பாண்டியன் அளித்த புகாரின் பேரில் ஆா்.எஸ். மங்கலத்தைச் சோ்ந்த தா்மராஜ், குப்புசாமி, ரவி, சசி, செல்வம், கோபாலகிருஷ்ணன், ராம்கி ஆகிய 7 போ் மீதும் ஆா்.எஸ். மங்கலம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.