பரமக்குடியில் சாலை மறியலில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியினா் 27 போ் கைது
பரமக்குடி பேருந்து நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியினா் மற்றும் பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினா்.
பரமக்குடி பேருந்து நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியினா் மற்றும் பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினா்.
பரமக்குடி: பரமக்குடி பேருந்து நிலையம் முன்பு எஸ்டிபிஐ கட்சியினா் மற்றும் பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சோ்ந்தவா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மறியலில் ஈடுபட்ட 27 பேரை போலீஸாா் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனா்.