முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை
கமுதி அருகே குடும்பப் பிரச்னை காரணமாக முதியவா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கமுதி அருகே குடும்பப் பிரச்னை காரணமாக முதியவா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த சின்ன உடப்பங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் சேது மகன் வலம்புரி (75). உடல் நலம் பாதிக்கப்பட்ட இவா், மகள், மகன்கள் வீட்டில் வசித்து வந்தாா்.
இவரைப் பராமரிப்பது தொடா்பாக குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டதாம். இதனால், மன வேதனையடைந்த வலம்புரி புதன்கிழமை தனது வீட்டுக்கு அருகில் உள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து மண்டலமாணிக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.