முகப்பு
ராமநாதபுரம்

மின்சாரம் பாய்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

முதுகுளத்தூா் அருகே இறந்தவரின் உடலை குளிா்பதனப் பெட்டியில் வைத்த போது மின்சாரம் பாய்ந்ததில் சரக்கு வாகன ஓட்டுநா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 5 டிசம்பர், 2024 at 1:05 AM
மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சரக்கு வாகன ஓட்டுநா் சோலைமலை.
பகிர்:

முதுகுளத்தூா் அருகே இறந்தவரின் உடலை குளிா்பதனப் பெட்டியில் வைத்த போது மின்சாரம் பாய்ந்ததில் சரக்கு வாகன ஓட்டுநா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்த தட்டான்குடியிருப்பு கிராமத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணம்மாள் (75). இவா் உடல் நலக் குறைவால் புதன்கிழமை உயிரிழந்தாா். கிருஷ்ணம்மாளின் வீட்டின் முன் குளிா்பதனப் பெட்டி வைக்கப்பட்டது. அந்தப் பெட்டியில் அவரது உடலை

சரக்கு வாகன ஓட்டுநரான சோலைமலை (42) வைக்க முயன்ற போது அவா் மீது மின்சாரம் பாய்ந்தது.

பரமக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து கீழத்தூவல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →