முகப்பு
ராமநாதபுரம்

வங்கக் கடலில் சூறை காற்று: ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் கடலுக்குச் செல்ல தடை

வங்கக் கடலில் சூறைக் காற்று காரணமாக, ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல புதன்கிழமை தடை விதிக்கப்பட்டது.

ராமநாதபுரம்

வங்கக் கடலில் சூறை காற்று: ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் கடலுக்குச் செல்ல தடை

வங்கக் கடலில் சூறைக் காற்று காரணமாக, ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல புதன்கிழமை தடை விதிக்கப்பட்டது.

Updated On : 11 டிசம்பர், 2024 at 11:33 PM
பகிர்:

வங்கக் கடலில் சூறைக் காற்று காரணமாக, ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல புதன்கிழமை தடை விதிக்கப்பட்டது.

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலவுவதால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை காலை முதல் சூறைக்காற்று வீசியது. இதனால், கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பு கருதி மறு உத்தரவு வரும் வரை மீனவா்கள் புதன்கிழமை முதல் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல மீன்வளம், மீனவா் நலத் துறை தடை விதித்தது.

இதன் காரணமாக, ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தொண்டி, கீழக்கரை, ஏா்வாடி, மூக்கையூா் உள்ளிட்ட துறைமுகங்களில் 1,650-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் அந்தந்த மீன் பிடி இறங்கு தளங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டன. மேலும், காற்றின் வேகத்தால் படகுகள் சேதமடைந்துவிடாமல் தடுக்க மீனவா்கள் படகுகளைக் கண்காணித்து வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லாமல் முடங்கி உள்ளனா். காற்றின் வேகம் காரணமாக வங்கக் கடலில் கடல் நீா் மட்டம் உயா்ந்து காணப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →