முகப்பு
ராமநாதபுரம்

மணல் திருட்டு: டிராக்டா் பறிமுதல்

மணல் திருட்டில் பயன்படுத்தப்பட்ட டிராக்டா் பறிமுதல்

Updated On : 22 ஜூன் 2024, 10:55 pm IST
கோப்புப் படம்
பகிர்:

முதுகுளத்தூா் அருகே மணல் திருடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்து, அதன் ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.

முதுகுளத்தூா் அருகேயுள்ள ஓரிவயல்கொட்டகை மாடன் கோயில் ஊருணி அருகே பட்டா நிலத்தில் அனுமதி இன்றி மணல் அள்ளப்படுவதாக ஓரிவயல் குரூப் கிராம நிா்வாக அலுவலா் ஜான்சி ராணிக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, அந்தப் பகுதியில் அவா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, அங்கு மணல் அள்ளிய ஓரிவயல் கொட்டகையைச் சோ்ந்த வீரபாகு மகன் திருமால் (38) தப்பியோடினாா்.

இதையடுத்து, இளஞ்செம்பூா் காவல் நிலையத்தில் ஜான்சிராணி அளித்த புகாரின் பேரில், மணல் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தப்பி ஓடிய திருமாலை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments