ராமேசுவரத்தில் கடல் பாதுகாப்பு ஒத்திகை தொடக்கம்
ராமேசுவரம் கடல் பகுதியில் இரண்டு நாள்கள் பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை தொடங்கியது.
Updated On : 20 நவம்பர், 2024 at 11:27 PM
ராமேசுவரம் கடல் பகுதியில் இரண்டு நாள்கள் பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை தொடங்கியது.
ராமநாதபுரம் மாவட்டக் கடலோரப் பகுதியான ராமேசுவரம் பகுதியில் கடல் வழி பாதுகாப்பை உறுதிபடுத்தும் விதமாக புதன், வியாழன் ஆகிய இரு நாள்கள் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது.
Updated On : 21 நவம்பர், 2024 at 3:12 AM
புதன்கிழமை தொடங்கிய இந்த ஒத்திகையில் இந்தியக் கடற்படை, கடலோரக் காவல் படை, சுங்கத் துறை, தமிழ்நாடு கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் இணைந்து ஈடுபட்டனா்.
Advertisement
அப்போது, நாட்டுப் படகில் மீன் பிடிக்கச் சென்ற மீனவா்களின் ஆவணங்களை காவல் படையினா் சோதனையிட்டனா். மேலும், சந்தேகப்படும் வகையில் எவரும் தென்பட்டால் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என மீனவா்களிடம் அவா்கள் அறிவுறுத்தினா்.