கோவிலாங்குளத்தில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்
கமுதி அருகே ஸ்ரீஉருவாட்டி காளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கமுதி அருகே ஸ்ரீஉருவாட்டி காளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற இந்தப் பந்தயத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, சிவகங்கை, விருதுநகா் உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாட்டுவண்டிகள், பந்தய வீரா்கள் கலந்து கொண்டனா். முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாட்டுவண்டி உரிமையாளா்கள், வீரா்களுக்கு குத்துவிளக்கு, ரொக்கப் பரிசு, நினைவுப் பரிசு ஆகியவை வழங்கப்பட்டன.
விழா ஏற்பாடுகளை கோவிலாங்குளம் தெற்குத் தெரு பங்காளிகள், கிராம பொதுமக்கள் செய்தனா்.