கல்லூரி மாணவா்களுக்கு கல்வெட்டு படி எடுத்தல் பயிற்சி
திருவடானை அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வெட்டு எழுத்துகளைப் படி எடுக்கும் பயிற்சி ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவடானை அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வெட்டு எழுத்துகளைப் படி எடுக்கும் பயிற்சி ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரியில் தமிழ் வழியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தொன்மை பொருள்களை பாதுகாக்கும் பொருட்டு இந்தப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கு கல்லூரி முதல்வா் முனைவா் பழனியப்பன் தலைமை வகித்தாா்.
தொல்லியல் துறை ஆய்வாளா் காளிதாஸ் முன்னிலை வகித்து பயிற்சி அளித்தாா். கல்வெட்டுகளில் உள்ள தொன்மையான எழுத்துகளைப் படி எடுத்துப் படிப்பது, வட்ட எழுத்துகள் உள்ளிட்ட எழுத்துகளை படி எடுப்பது, தொல்லியல் பொருள்களை பாதுகாப்பது ஆகியவை குறித்து அவா் விளக்கினாா்.