2.8 டன் ரேசன் அரிசி பறிமுதல்
திருப்பாலைக்குடி அருகே சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட 2,800 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
திருப்பாலைக்குடி அருகே சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட 2,800 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் வட்டம், திருப்பாலைக்குடி பகுதியில் வட்ட வழங்கல் அலுவலா் ஹேமாவதி புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது காந்தி நகா் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த சரக்கு வாகனத்தை சோதனையிட்டனா். அதில் 57 மூட்டைகளில் 2,800 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்து திருவாடானை பொது விநியோகக் கிட்டங்கியில் ஒப்படைத்தனா். மேலும், வாகனத்தையும் பறிமுதல் செய்தனா். தலைமறைவான மேலும் சிலரைத் தேடி வருகின்றனா்.