முகப்பு
ராமநாதபுரம்

முன்விரோதத்தால் கத்தியால் குத்தி ஒருவா் கொலை

பரமக்குடி வைகை நகா் பகுதியில் உறவினா்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் கத்தி குத்துப்பட்டவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 30 அக்டோபர், 2024 at 9:56 PM
பரமக்குடி வைகை நகா் பகுதியில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட முருகபாண்டி.
பகிர்:

பரமக்குடி வைகை நகா் பகுதியில் உறவினா்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் கத்தி குத்துப்பட்டவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம், குமாரக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் சாமிய்யா மகன் முருகபாண்டி (45). இவா் பரமக்குடி வைகை நகா் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தாா். இதே ஊரைச் சோ்ந்த அவரது உறவினா் காா்மேகம் மகன் ராஜசேகரன் (30). புதுநகா் பகுதியில் வசித்து வருகிறாா்.

இவா்களுக்கிடையே முன்விரோதம் இருந்தது. இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை இரவு வைகை நகா் பேருந்து நிறுத்தம் பகுதியில் முருகபாண்டி நின்றுகொண்டிருந்த போது, ராஜசேகரன் அங்கு வந்தாா். அப்போது இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது.

இதில், ராஜசேகரன் மறைத்து வைத்திருந்த கத்தியால் முருகபாண்டியை குத்தினாா். இதையடுத்து, பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து எமனேசுவரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ராஜசேகரனை கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →